திடீரென கருப்பாக மாறிய அன்னப்பறவை... குளத்தில் நீந்திக்கொண்டிருந்த போது அரங்கேறிய விசித்திரம்

திடீரென கருப்பாக மாறிய அன்னப்பறவை... குளத்தில் நீந்திக்கொண்டிருந்த போது அரங்கேறிய விசித்திரம்

இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வெள்ளை அன்னப்பறவை ஒன்று திடீரென கருப்பு நிறத்தில் மாறிய ஒரு விசித்திரமான சம்பவம் மக்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. ஏதோ ஒரு அறியப்படாத பொருள் அந்த குளத்தில் கொட்டப்பட்ட பின்னர் வெள்ளை அன்னப்பறவை கருப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது.

அது பிரிண்டருக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை டோனராக இருக்கலாம் என்று ஆர்எஸ்பிசிஏ காவல்துறை சந்தேகிக்கிறது. சமீபத்தில் வெஸ்ட்பரியில் உள்ள கருப்பு மூலக்கூறு கலந்திருந்த குளத்திலிருந்து இந்த அன்னப்பறவை மீட்கப்பட்டது.

மேலும், துகள் காரணமாக கருப்பு நிறத்தில் மாறிய அன்னப்பறவையை சுத்தப்படுத்த ஒவ்வொரு முறையும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நேரத்தை செலவிட்டதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அன்னப்பறவையின் கருப்பு நிறம் மறையவில்லை. மேலும், கருப்பு நிறம் போவதற்காகவே ஒரு பிரத்யேக திரவத்தை பயன்படுத்தி தொண்டு நிறுவன ஊழியர்கள் அதனை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

அன்னப்பறவையை பலமுறை தூய்மைப்படுத்தியும் அதன் மேல் உள்ள கருப்பு நிறம் மறையவில்லை என்பது தான் வேதனை அளிக்கக்கூடிய ஒரு விஷயம். மேலும், அந்த டோனர் போன்ற கருப்பு துகள் கொட்டப்பட்ட குளத்தில் இதுபோன்று வேறு ஏதேனும் ஒரு அன்னப்பறவையை கண்டால் தகவல் அளிக்கும்படி அப்பகுதி மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.