
நடிகர் சுஷாந்தை தொடர்ந்து டோனி பட நடிகர் மற்றொருவர் திடீர் தற்கொலை! இறப்பதற்கு முன் பதிவிட்ட காணொளி
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நாஹார் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்தாண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தற்போதும் விவாதங்களும் விமர்சனங்களும் பரவி வருகிறது.
இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் ஆவார்.
இந்நிலையில், அதே படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகர் சந்தீப் நாஹார் என்பவர் இன்று மும்பை கொரேனானில் உள்ள அவது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சந்தீப் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மனவேதனை அடைந்ததாகவும், இதனால் நான் வாழ்கையில் தவறான முடிவை எடுக்க நேரிடும் எனத் தெரிவித்து காணொளி ஒன்றினை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.