வாய்த்தர்க்கம் வலுத்ததில் ஏற்பட்ட விபரீதம்!

வாய்த்தர்க்கம் வலுத்ததில் ஏற்பட்ட விபரீதம்!

பலாங்கொடை பொலிஸ் பிரிவின் சீதலஹந்திய, வேவெல்வத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேவெல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுத்ததிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கத்தின் போது, போத்தல் ஒன்றை உடைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

28 வயதுடைய சீதலஹந்திய, வேவெல்வத்தை, ராஸ்ஸவெல சந்தி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.