ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு
ஓகஸ்ட் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவை எதிர்வரும் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு அச்சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின்கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரம் ரூபாய் தொகையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.