சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது