சிறந்த முறையில் கொரோனவை கட்டுப்படுத்தும் நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை..!

சிறந்த முறையில் கொரோனவை கட்டுப்படுத்தும் நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை..!

அவுஸ்திரேலியா லோவி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, வெற்றிகரமாக கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் உலகின் முதல் பத்து நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது.

உலகின் பிற நாடுகளை விட நியூசிலாந்து இந்த தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வியட்நாம் மற்றும் தாய்வான் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்திலும் , 10வது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றன.

அந்த வகையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள நாடுகளில் ஒரே தெற்காசிய நாடாக இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லோவின் ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான நாடுகளில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், தொற்றை கண்டறியும் சோதனைகள் மற்றும் இறப்பு விகிதங்கள் குறித்தும் ஆய்வு செய்தே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு :

1. நியூசிலாந்து சராசரியாக 94.4.

2. வியட்நாம், 90.8

3. தாய்வான், 86.4

4. தாய்லாந்து, 84.2

5. சைப்ரஸ், 83.3

6. ருவாண்டா, 80.8

7. ஐஸ்லாந்து, 80.1

8. அவுஸ்திரேலியா, 77.9

9. லாட்வியா, 77.5

10. இலங்கை, 76.8