
24 மணி நேரத்தில் அதிகரித்த கொரோனா- தென்னிலங்கையில் மூடப்பட்ட முக்கிய இடம்!
வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில தினங்களாக வெள்ளவத்தைப் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் வெள்ளவத்தை பகுதியில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, வெள்ளவத்தை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார மருந்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.