
வெளிநாடுகளில் இருந்து 183 இலங்கையர்கள் நாடு திரும்பினர்...!
இன்று காலை 8.30 ஊடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் 6 விமானங்கள் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, சவுதி அரேபியாவில் இருந்து 75 பேரும், சிங்கப்பூரில் இருந்து 67 பேரும், கட்டாரில் இருந்து 28 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதேநேரம், இந்த காலப்பகுதியில் தொழில் நிமித்தம், 627 இலங்கையர்கள், 8 விமானங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.