
மேலும் 248 பேர் நாடு திரும்பினர்!
கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 248 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
துபாயிலிருந்து 114 பேர், டோஹாவிலிருந்து 57 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
18 விமான சேவைகள் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் 513 இலங்கையர்கள் 19 விமான சேவைகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.