![](https://yarlosai.com/storage/app/news/9c80ee2ddb49b8294ea32c24531441cf.png)
புதிய வருடத்தில் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ்.மாவட்ட செயலகத்தின் கடமைகள்!
யாழ்.மாவட்ட செயலகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் என்பன இம்பெற்றிருந்தது.
நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.