யாழில் பாடசாலைகளில் தொற்றுநீக்கும் பணிகள் ஆரம்பம்

யாழில் பாடசாலைகளில் தொற்றுநீக்கும் பணிகள் ஆரம்பம்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமி தொற்று வீசும் பணிகள் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப்படையினரால் இந்தப் பணி யாழ்ப்பாணம்,திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி 29ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் கடமைக்குத் திரும்ப வேண்டும்.

 

 

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி திங்கட்கிழமை 5,11 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இதேவேளை,எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி திங்கட்கிழமை 10 மற்றும் 12ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்தோடு எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி திங்கட்கிழமை 3,4,6,7,8,9ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

எனினும் தரம் ஒன்று மற்றும் இரண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலைகளுக்கு கிருமித்தொற்று நீக்கி விசுறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.