இலங்கையில் என்றுமில்லாதவாறு இன்றையதினம் அதிகரித்த கொரோனா நோயாளிகள்
இலங்கையில் என்றுமில்லாதவாறு இன்றையதினம் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இவர்களில் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் மற்றும் சிறைக் கைதிகளும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,861 ஆக அதிகரித்துள்ளது.