மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலால் பாரிய சேதம்-அஜித் ரோஹன
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிறைச்சாலையின் உணவகம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.