வாள் வெட்டில் சம்பவ இடத்திலேயே பலியான நபர்...!

வாள் வெட்டில் சம்பவ இடத்திலேயே பலியான நபர்...!

கிளிநொச்சி - தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் உந்துருளியில் பயணித்த ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பளை காவல்நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

நேற்று பிற்பகல் வாள் வெட்டுக்கு இலக்கான நபர் கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து மாமுனை நோக்கி பயணித்த வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாமுனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.