யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் பெரும் மோதல்! இருவர் கொலை

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் பெரும் மோதல்! இருவர் கொலை

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகை, வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.

இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சின்னவன் செல்வம் (56) மற்றும் இராசன் தேவராசா (31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலையிலிருந்து இரு குடும்பங்களுக்கு இடையில் முறுகல் நிலை காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.