விளையாட்டு துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் விசாரணைகள் தொடரலாம்..!
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே அல்லது தற்போதைய விளையாட்டு அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.