இரண்டாம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த விமானப்படை வீரர்...!
திருகோணமலையில் அமைந்துள்ள சீனக்குடா துறைமுக விமானப்படை முகாமில் கடமையாற்றும் விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் குறித்த முகாமின் கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
30 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.