மேல் மாகாணத்தில் நீடிக்கப்பட்ட ஊரடங்கு - வர்த்தகர்கள் எடுத்த நடவடிக்கை
மேல் மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதை அடுத்து பெட்டாவில் உள்ள சில வியாபார நிலையங்களில் வர்த்தகர்கள் மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கினர்.
அதன்படி, குணசிங்ஹபுர, கேசல்வத்தை, கஸ்பஹா மற்றும் ஆமர் வீதியில் அத்தியாவசிய மளிகைக் கடைகள் திறக்கப்பட்டன.
இதேவேளை மக்களும் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.



