போதை மாபியா "குடு திலானுக்கு” மரணதண்டனை

போதை மாபியா "குடு திலானுக்கு” மரணதண்டனை

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

‘குடு திலான்’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

274.68 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யயப்பட்டிந்த நிலையில் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல பகுதியில் வைத்து 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்