வியட்நாமில் விடாது பெய்யும் மழை- நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயம்

வியட்நாமில் விடாது பெய்யும் மழை- நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயம்

மத்திய வியட்நாமின் குவான்-தீர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் மாயமாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக இவ்வாறு மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதத்தில் மாத்திரம் இயற்கை அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது

எதிர்வரும் நாட்களிலும் அங்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென அந்நாட்டு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.