நவராத்திரியை முன்னிட்டு 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா நிதியுதவி

நவராத்திரியை முன்னிட்டு 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா நிதியுதவி

நவராத்திரியை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

10 ஆலய பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கி வைத்தார்.