மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 311 பேர் கைது

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 311 பேர் கைது

மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் 6 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணிவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 110 பேரும், ஐஸ் ரக போதைப்பொருள் தொடர்பில் 14 பேரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.