மூவருக்கு ஆயுள் தண்டனை...!

மூவருக்கு ஆயுள் தண்டனை...!

ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த மற்றும் வர்த்தகம் செய்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

குறித்த மூவரும் வெள்ளவத்தை, மாளிகாவத்தை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.