மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் உள்ள மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் என்றும், ஏனைய 12 பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் மினுவங்கொடை கொத்தணியில் மொத்தமாக 1,608 கொரேனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.