பெரிய வெங்காய விவசாயிகளின் கவலை
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து தாம் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக பொலனறுவை-படுஹேன பிரதேச பெரிய வெங்காய விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் பெரிய வெங்காய விவசாயத்தை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் இதன்போது தெரிவித்ததோடு, இதற்காக தமக்கு நியாயமான தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.