கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா -சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா -சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

கம்பகாவை மையம் கொண்ட கொரோனா தொற்று தற்போது தலைநகர் கொழும்பைில் அதிகரித்து செல்வதால் ஆபத்தின் விளிம்புக்குள் தள்ளப்பட்ருக்கிறது கொழும்பு மாவட்டம்.

இதன்படி மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை உட்பட இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்பிலிருந்து தொற்று ஏற்பட்ட 160 பேரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் டாக்டர் ஜயருவன் பண்டார கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் ஏற்படுவதை தடுப்பதற்கு முடியும் என்றாலும், சன நெருக்கடி உள்ளிட்ட காரணங்களினால் தொற்றின் ஆபத்து தற்போதும் இருக்கின்றது என்று அவர் கூறினார்.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அவரிடத்திலிருந்து மேலும் பலருக்கும் தொற்று ஏற்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.