
மாலைதீவிலிருந்து வந்தவருக்கு 4 மாதங்களின் பின் தொற்றிய கொரோனா
மாலைதீவில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் பணியை முடித்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இரத்தினபுரி - கஹவத்த பகுதியில் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றனது.
இவருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக கஹவத்த நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
அந்த நபரின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அவர் பார்வையிட்ட கடைகள் உட்பட 12 இடங்களில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
மாலைதீவில் இருந்து திரும்பிய பின்னர், அந்த நபர் முறையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார், மேலும் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என பொது புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.