6 ஆயிரத்து 482 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்...!

6 ஆயிரத்து 482 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்...!

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 6 ஆயிரத்து 482 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்தின் பிரதி பணிப்பாளர், மருத்துவர் ஜயரூவான் பண்டார தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மருத்துவர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராகவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.