ஊரடங்கு உத்தரவு பகுதியில் வாழும் மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை எதிர்வரும் 13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.