இராணுவத் தளபதியின் உடனடி உத்தரவு - வடக்கில் முடக்கப்பட்டது இரு பகுதிகள்

இராணுவத் தளபதியின் உடனடி உத்தரவு - வடக்கில் முடக்கப்பட்டது இரு பகுதிகள்

வட பகுதியில் மன்னார் மாவட்டத்தின் இரு பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.