பாடசாலை மாணவிக்கு கொரோனா - அவசரமாக சேகரிக்கப்படும் விபரங்கள்
கொழும்பில் உள்ள பிரபலமான பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
9ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி கடந்த இரண்டாம் திகதி வரை பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.
இதனால் அங்கு பயிலும் மாணவர்கள் பற்றிய விபரங்கள் அவசரமாக சேகரிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.