பந்துவீச்சு குறித்து புகார் - சுனில் நரேன் பந்துவீச தடை விதிக்கப்படுமா?

பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுனில் நரேன் பந்து வீச்சு குறித்து போட்டி நடுவர்கள் புகார் செய்துள்ள நிலையில் அவர் பந்துவீச தடை விதிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரீன். இவர் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார்.

பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவரது பந்து வீச்சு குறித்து போட்டி நடுவர்கள் புகார் செய்துள்ளனர். அவர் விதிமுறைகளை மீறி பந்து வீசுகிறார். அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கிறது என்று புகார் அளித்துள்ளனர்.

அவர் மீது ஏற்கனவே இது மாதிரியான குற்றச்சாட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து சுனில் நரீன் பந்துவீச தடை விதிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.