கொள்கலன் பாரவூர்தி சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது

கொள்கலன் பாரவூர்தி சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் அருகே கொள்கலன் பாரவூர்தி சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கொள்கலன் பாரவூர்தியை அதன் சாரதி ஓரிடத்தில் நிறுத்தியதற்காக அவரை இவ்வாறு சந்தேக நபர்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.