குடியிருப்பு பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க புதிய காவல்துறை பிரிவுகள்

குடியிருப்பு பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க புதிய காவல்துறை பிரிவுகள்

தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் 3 புதிய காவல்துறை பிரிவுகள் தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்படவுள்ளன.

அதன்படி, கிராண்ட்பாஸ்-முவதொர உயன தொடர்மாடி குடியிருப்பு, தெமடகொட-மிஹிந்துசென்புர தொடர்மாடி குடியிருப்பு பகுதி மற்றும் மோதர-மெத்சந்த செவன குடியிருப்பு பகுதிகளிலுமே இவ்வாறு புதிய காவல்துறை பிரிவுகளை நிறுவவுள்ளதோடு, இதை மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் திறந்துவைக்கவுள்ளார்.

நகர்ப்புற மக்களுக்காக கட்டப்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் போதைப்பொருள் மற்றும் பிற தீமைகளுக்கு அடிமையாகாமல் தடுக்கும் நோக்கிலேயே குறித்த காவல்துறை பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.