குளவி கொட்டு இலக்கான ஆணொருவர் உள்ளிட்ட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நல்லதன்னிய-மரே தேயிலைத் தோட்டத்தில் பொரஸ்ட் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 6 தொழிலாளர்கள் மஸ்கெலிய பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
5 பெண்கள் உள்ளிட்ட ஆணொருவரே இவ்வாறு குளவிக்கொண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.