வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..! -

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..! -

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு - மத்திய வங்காளவிரிகுடா கடற்பிராந்தியங்களில் குறைந்தழுத்த தாழமுக்கம் வலுவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஆழமான கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.