ஊரடங்கு தொடர்பில் போலியான செய்தியை வெளியிட்ட இளைஞர் கைது...!

ஊரடங்கு தொடர்பில் போலியான செய்தியை வெளியிட்ட இளைஞர் கைது...!

ஜனாதிபதி செயலகத்தின் கடித ஏட்டினை போன்று போலியாக தயாரித்து ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இணையத்தளத்தில் உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ய்பபட்ட குறித்த இளைஞர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.