பிரான்சில் தூக்குத் தண்டனை நிறுத்தம் - அக். 9- 1981

பிரான்ஸ் 1981-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி தூக்குத் தண்டனையை ரத்து செய்தது.

மிகக் கொடுமையான குற்றத்திற்காக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகள் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது. பல நாடுகள் தூக்குத் தண்டனை ரத்து செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் 1981-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி தூக்குத் தண்டனையை ரத்து செய்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 

* 1799 - லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் 1,200,000 டாலர் பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது. * 1804 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது. * 1806 - பிரஷ்யா பிரான்ஸ் மீது போர் தொடுத்தது. * 1820 - கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. * 1831 - கிரேக்கத் தலைவர் இயோனிஸ் கப்பொடீஸ்ட்றியா படுகொலை செய்யப்பட்டார். * 1835 - கொழும்பு ராயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. * 1854 - ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.

* 1871 - மூன்று நாட்களுக்கு முன்னர் சிகாகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். * 1888 - வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. * 1910 - மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார். * 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. * 1934 - யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான். * 1941 - பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார். * 1962 - உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. * 1963 - வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.