மத ஸ்தலத்தில் வேலை செய்பவருக்கும், காசாளருக்கு கொரோனா தொற்று உறுதி

மத ஸ்தலத்தில் வேலை செய்பவருக்கும், காசாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சிலாபம் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் சிலாபம் அம்பகடவில பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

இதையடுத்து குறித்த நிலையத்தில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மினுவாங்கொடையில் உள்ள ஒரு முன்னணி நிதி நிறுவனத்தின் காசாளருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபர் ஜா-எல - கபுவத்தையில் வசிப்பவர் ஆவார்.