வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 302 இலங்கையர்கள்..!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 302 இலங்கையர்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 302 பேர் இன்று காலை (06) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

துருக்கியில் இருந்து 260 பேரும் கட்டாரில் இருந்து 42 இலங்கையர்களுமே இவ்வாறு இலங்கை திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் தற்போது பீசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.