ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவையா? பொலிஸார் அறிவித்துள்ள விசேட இலக்கங்கள்
பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் தற்போது ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்தப்பகுதிகளில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவையானவர்களுக்கு பொலிஸார் விஷேட இலக்கங்களை வழங்கியுள்ளனர்.
அதன்படி, பின்வரும் எண்களைத் தொடர்புகொண்டு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவைப்படுபவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
சி. பீரிஸ், உதவி பொலிஸ் அதிகாரி (ASP), மினுவங்கொட : 071 - 8591617
ஆர். கொட்டாஹச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (SSP), திவுலபிட்டிய : 071 - 8591628