சோவியத் யூனியன் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்தது

சோவியத் யூனியன் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்தது

ஏகே-47 தானியங்கி துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது. ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் தயாரிக்கப்பட்டது. 870 மிமீ நீளம் கொண்ட இந்த துப்பாக்கியில் 7.62x39 மிமீ கொண்ட தோட்டாக்களை பயன்படுத்தலாம். இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள்

ஏகே-47 தானியங்கி துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது. ஒன்று நிலையான பிடியுடன் கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன்  தயாரிக்கப்பட்டது.

870 மிமீ நீளம் கொண்ட இந்த துப்பாக்கியில் 7.62x39 மிமீ கொண்ட தோட்டாக்களை பயன்படுத்தலாம்.

 


இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சேர்க்கப்பட்டது.

இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.

இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் உலகப்போர் முடிவுற்ற பின்தான் பயன்பாட்டுக்கு வந்தது.