எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆமைகளின் செயற்பாட்டில் மாற்றம்..!

எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆமைகளின் செயற்பாட்டில் மாற்றம்..!

தீப்பற்றிய எம்.ரி நியூ டயமன்ட் கப்பல் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பரப்பில், ஆமைகளின் நடத்தையில் மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாரா எனப்படும் தேசிய நீர் வளங்கள் ஆய்வகத்தினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால், ஆமைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக, குறித்த கடல் பரப்பின் நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும் அந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.