
ஸ்கொட்லாந்தில் இணையம் ஊடான சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!
கொரோனா முடக்க காலத்தில் ஸ்கொட்லாந்தில் இணையம் ஊடான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது, கொரோனா முடக்க காலத்தில் கொள்ளை, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இணையம் ஊடான மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இணையம் ஊடான ஊடான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இவ்வாறான 530 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 21 சதவீதத்தினால் இது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.