
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1889ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1287ஆக காணப்படுகிறது.
மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 591 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.