கழிப்பறை குழியில் விழுந்து சிறுமி பலி

கழிப்பறை குழியில் விழுந்து சிறுமி பலி

மாவனெல்லை-கனேதென்ன-உதயமாவத்தை பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கழிப்பறை குழியொன்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி வீட்டு முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கழிப்பறை குழியின் மேற்பகுதி உடைந்து அதனுள் விழுந்துள்ளார்.

இதன் பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.