
ஏழு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து செல்லும் நிலையில் ஏழு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதுடன், இதன்போது கொரோனா பரவல் அதிகமாகவுள்ள மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உ.பி, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர்களுடன் சுகாதார அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாடு முழுதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் இந்த ஏழு மாநிலங்களின் பங்குமட்டும் 65 சதவீதம் ஆகும். அதேபோல் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இந்த ஏழு மாநிலங்களின் பங்கு 77 சதவீதமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.