ஆசிரியரின் உயிரை பலியெடுத்தது டிப்பர்

ஆசிரியரின் உயிரை பலியெடுத்தது டிப்பர்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவத்தை சேருநுவர பகுதியைச் சேர்ந்த எச் ஏ.கருணாரத்தின என்ற 43 வயதுடைய ஆசிரியரே உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(15) மாலை இடம்பெற்றுள்ளது. கந்தளாயிலிருந்து தெஹிவத்தைக்குச் சென்ற டிப்பர் வாகனம்,தெஹிவத்தையிலிருந்து கல்லாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் மீது மோதியதிலேயே இவ்விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். டிப்பர் வாகனம் வேகமாக சென்றதால் இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.