ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹலீம் ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹலீம் ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் எ.எச்.எம்.ஹலீம் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் குறித்த இருவரும் குறித்த பிரிவில் பிரசன்னமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதற்கு முன்னரும் இவர்கள் இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.