உத்தேச 20ஆம் திருத்த சட்டமூல வரைவை ஆராயும் விசேட குழுக்கூட்டம் இன்று

உத்தேச 20ஆம் திருத்த சட்டமூல வரைவை ஆராயும் விசேட குழுக்கூட்டம் இன்று

உத்தேச 20 ஆம் திருத்த சட்டமூல வரைவை ஆராய்வதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று கூடவுள்ளது.

இரண்டு சிறுபான்மையின பிரதிநிதிகள் உள்ளிட்ட 9 பேர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ஸ, இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன், சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சி தொலவத்த ஆகியோர் குறித்த குழுவின் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், தமது ஆய்வுகள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த குழுவின் தலைவர் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.